லண்டன் பேருந்தில் 14 வயது சிறுமி அருகே உட்கார்ந்த ஆண் செய்த செய்யக்கூடாத செயல்! புகைப்படத்தை வெளியிட்டு பொலிசார் கூறிய முக்கிய தகவல்
லண்டன் பேருந்தில் 14 வயது சிறுமி கால்களின் மீது தவறான முறையில் கை வைத்து பாலியல் தாக்குதல் நடத்திய நபர் தொடர்பிலான முக்கிய தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
வடக்கு லண்டனின் Haringeyவில் தான் இந்த சம்பவம் கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு நடந்துள்ளது.
அப்போது 14 வயதான சிறுமி பேருந்தில் உள்ள இருக்கையில் உட்கார்ந்திருந்தார், அந்த சமயத்தில் பேருந்துக்குள் ஏறிய நபர் ஒருவர் சிறுமி அருகே வந்த உட்கார்ந்தார். பின்னர் சிறுமி கால்களின் மீது கை வைத்து தவறான முறையில் நடந்து பாலியல் தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
இதையடுத்து சிறுமி பேருந்தில் இருந்து இறங்கி வேகமாக நடந்தவாறு தனது தாயிடம் போனில் பேசினார். அப்போதும் சிறுமியை அந்த நபர் பின் தொடர்ந்து வந்தான், அவன் அங்கிருந்து செல்லும் வரையில் சிறுமி போனில் பேசியபடி இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக நபர் ஒருவரிடம் விசாரிக்க வேண்டும் என கூறி பொலிசார் சிசிடிவி புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அவரை கண்டுபிடித்து பேச வேண்டும் என முனைப்புடன் பொலிசார் உள்ளனர்.
அவர் குறித்து யாருக்கேனும் அடையாளம் அல்லது தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.