லண்டன் இரயிலில் இளம்பெண்ணால் ஆண் பயணிக்கு நேர்ந்த மோசமான அனுபவம்! வெளியான புகைப்படம்
லண்டன் இரயிலில் உட்கார்ந்திருந்த ஆணிடம் மோசமான வார்த்தைகளால் பேசி இனவெறி தாக்குதல் நடத்திய பெண் தொடர்பிலான முக்கிய தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
Ealing Broadway stationல் இருந்த இரயிலில் தான் இச்சம்பவம் கடந்த ஜூன் மாதம் 6ஆம் திகதி நடந்துள்ளது. அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு இரண்டு இளம்பெண்கள் இரயிலில் ஏறினார்கள்.
பின்னர் ஒருவரையொருவர் தள்ளிவிட்டு விளையாடினார்கள். அப்போது அருகில் உட்கார்ந்திருந்த ஆண் பயணிக்கு இது தொந்தரவாக இருந்ததால் ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்க அதில் ஒரு பெண்ணிற்கும் அந்த ஆண் பயணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த அப்பெண், அவரை பார்த்து மோசமான மற்றும் அருவருப்பான வார்த்தைகளை பேசி இனவெறி தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் விசாரித்து வந்த நிலையில் தற்போது பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
அவரிடம் சம்பவம் தொடர்பாக தகவல்கள் இருக்கும் எனவும் அது விசாரணைக்கு உதவும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.