லண்டனில் மாலை நேரத்தில் சந்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 30 வயது பெண்! பள்ளிக்கூடம் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்
லண்டனில் சாலை சந்தில் வைத்து இளம்பெண் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவமானது பெக்ஸியில் தான் கடந்த 21ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு நடந்துள்ளது. அங்குள்ள சிறிய பாதை கொண்ட சந்தில் தான் வந்து கொண்டிருந்த போது தன்னை நபர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்தார் என 30 வயதான பெண் பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.
சம்பவம் நடந்த இடத்தின் அருகிலேயே பள்ளிக்கூடமும், மோட்டார் வண்டிகளை பழுது பார்க்கும் இடமும் இருந்ததாக தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த அன்றே பாதிக்கப்பட்ட பெண் பொலிசில் புகார் கொடுத்த நிலையில் இது தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது குறித்து பொலிஸ் அதிகாரி நியல் மெக்குளோஸ்கி கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக யாருக்காவது தகவல் தெரிந்தால் எங்களிடம் முன் வந்து கூறலாம்.
பாலியல் தாக்குதல்கள் புகார்களை நாங்கள் தீவிரமாக எடுத்து விசாரித்து வருகிறோம்.
இது போல பாதிக்கப்பட்டவர்கள் துணிச்சலமாக புகார் அளிக்கும் பட்சத்தில் நிச்சயம் அவர்களுக்கு ஆதரவு வழங்குவோம் என கூறியுள்ளார்.