லண்டன் தெருவில் திடீரென 50க்கும் மேற்பட்ட பொலிசார் குவிந்ததால் பரபரப்பு..! என்ன நடந்தது? பொலிஸ் வெளியிட்ட தகவல்
பிரித்தானியா தலைநகர் லண்டனில் திடீரென 50க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து Westminster காவல்துறை ட்விட்டரில் அளித்த தகவலின் படி, Westminster ஆக்ஸ்போர்டு தெருவில் நபர் ஒருவர் துப்பாக்கியுடன் இருப்பதாக 9:30 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது.
சிறப்பு அதிகாரிகள் உடனடியாக சம்பவயிடத்திற்கு அனுப்பப்பட்டு, அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சந்தேக நபர்கள் யாரும் கண்டறியப்படவில்லை. யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
சம்பவ இடத்தில் ஒரு பெரிய கூட்டம் கூடியது, இதன் விளைவாக சில சிறிய பிரச்சனைகள் ஏற்பட்டன.
A large crowd gathered at scene, resulting in some small outbreaks of disorder. A number of people were arrested on suspicion of affray & taken into custody.
— MPS Westminster (@MPSWestminster) September 18, 2021
Officers remain on scene.
பல பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு காவலில் எடுக்கப்பட்டனர். அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர் என Westminster காவல்துறை தெரிவித்துள்ளது.
Reports of looting outside a sweet shop on Oxford street, multiple arrests, road closed off, over 50 police on the scene and police helicopter 🚁 above pic.twitter.com/UeyKauSm8l
— Paul Brown 🇬🇧 Browns fan🏈 London News 🎥Vlogger (@PaulBrown_UK) September 18, 2021
இதன் மூலம் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் இருப்பதாக பொலிசாருக்கு வந்த தகவல் பொய் என தெரியவந்துள்ளது.
A double bluff 🤣
— ⚒🚇WHISTLEBLOWER CHARGED WITH THREAT TO KILL BORIS (@lulinspector) September 18, 2021
The latest scenes from Oxford Street #London.
There was no looting going on!
There was a fight unsure about injuries. https://t.co/jdHEgj1fsZ pic.twitter.com/PB6EXpua87
அதேசமயம், ஆக்ஸ்போர்டு தெருவில் ஒரு கடைக்கு வெளியே கொள்ளை நடந்ததாக கூறப்படுகிறது.