லண்டனில் 8 வயது சிறுவனை குடும்பத்தாரிடம் இருந்து பிரித்து அழைத்து செல்ல முயன்ற பெண்! புகைப்படத்துடன் முக்கிய தகவல்
லண்டனில் 8 வயது சிறுவனிடம் கவர்ந்து பேசி குடும்பத்தாரிடம் இருந்து அவனை பிரித்து அழைத்து செல்ல முயன்ற பெண் தொடர்பிலான முக்கிய தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி எப்போதும் பரபரப்பாக காணப்படும் லண்டனின் வாட்டர்லூ ரயில் நிலையத்தில் தான் இச்சம்பவம் கடந்த மாதம் 22ஆம் திகதி இரவு 8 மணியளவில் நடந்துள்ளது.
அப்போது குடும்பத்தாருடன் இருந்த 8 வயது சிறுவன் அருகே சென்ற பெண்ணொருவர் அவனிடம் பாலியல் ரீதியான வார்த்தைகளை பேசியுள்ளார், பின்னர் அவனை தனியாக அழைத்து செல்ல முயன்றிருக்கிறார்.
இதை கவனித்த சிறுவனின் தாயார் உஷாராகி அப்பெண்ணை நோக்கி சென்ற போது அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இந்த நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணின் சிசிடிவி புகைப்படங்களை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அவரிடம் இது தொடர்பில் விசாரிக்க வேண்டும் எனவும் யாருக்காவது தகவல் கிடைத்தால் தங்களிடம் கூறலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.