லண்டனை சேர்ந்த பெண்ணொருவர் தொடர்பில் அவசர வேண்டுகோள் விடுத்த பொலிசார்! அவரின் புகைப்படத்துடன் முழு தகவல்
லண்டனில் காணாமல் போன 41 வயது பெண் தொடர்பில் பொலிசார் அவசர வேண்டுகோளை முன் வைத்துள்ளனர்.
வடக்கு லண்டனின் பார்னெட் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டினா அலெக்ஸெண்ட்ரூ (41) இவர் தனது வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தங்களது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவையும் வெளியிட்டுள்ளனர்.
அதில், 41 வயதான கிறிஸ்டினா அலெக்ஸெண்ட்ரூ வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார், அவரை கண்டுபிடிக்க உங்கள் உதவி தேவை என பொதுமக்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
யாராவது கிறிஸ்டினாவை பார்த்தாலோ அல்லது அவர் குறித்து தகவல் தெரிந்தாலோ தங்களுக்கு தெரிவிக்கலாம் எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.
Metropolitan பொலிஸ் இணையதளத்தில், நீங்கள் ஒருவரை காணவில்லை என்று தெரிவிக்க 24 மணிநேரம் காத்திருக்க வேண்டியதில்லை. உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்கவே நாங்கள் இங்கு இருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Police need your help to find 41 yr old Kristina Alexandrou who was reported #Missing from her home in #Barnet if seen call police on 999 Ref: 21MIS027325 pic.twitter.com/a69WCDGZEx
— Harrow MPS | North West BCU (@MPSHarrow) September 6, 2021