லண்டன் மாநகரை உலுக்கிய பெண்ணின் சடலம்... 36 மணி நேரத்தில் 6 கோர சம்பவங்கள்
பிரித்தானிய தலைநகர் லண்டனில் 36 மணி நேரத்தில் ரயில் தண்டவாளத்தின் அருகே பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதுடன், 6 பேர்கள் கத்திக்குத்து தாக்குதலுக்கும் இலக்காகியுள்ளனர்.
கத்திக்குத்து தாக்குதல்
கிழக்கு லண்டனில் வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் தொடங்கி வெள்ளிக்கிழமை வரையில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மூவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
Image: Google
வடக்கு லண்டனில் இருவர் கத்தியால் தாக்கிக்கொண்டு காயமடைந்துள்ளனர். மட்டுமின்றி மேற்கு லண்டனில் 13 வயது பள்ளி மாணவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இதேவேளை, தெற்கு லண்டனில் ரயில் தண்டவாலம் அருகே 46 வயது பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் கிழக்கு லண்டனில் உள்ள ரோம்போர்டில் மாலை 4.14 மணியளவில் 18 வயது இளைஞன் கத்தியால் குத்தப்பட்டான்.
பார்னெட் பகுதியில் கத்தி சண்டை
அதே நாள் இரவு சுமார் 9.13 மணியளவில் மேலும் இரண்டு 18 வயது இளைஞர்கள் பார்னெட் பகுதியில் கத்தி சண்டையில் ஈடுபட்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
@UKNIP
வெள்ளிக்கிழமை பகல் சுமார் 9.15 மணியளவில் நாட்டிங் ஹில் பகுதியில் 13 வயது மேற்கு லண்டன் பள்ளி மாணவன் காலில் கத்தியால் குத்தப்பட்டான்.
அதே நாளில், கிழக்கு லண்டனில் இரவு 10.43 மணியளவில் நடந்த இரட்டைக் கத்திக்குத்து தாக்குதலில் இருவர் காயமடைந்த சம்பவத்துடன், 36 மணி நேரத்தில் மொத்தம் 6 கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.