லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் ஆயுதங்களை காட்டி மிரட்டி நடந்த கொள்ளை! சிசிடிவி காட்சிகள் சமர்ப்பிப்பு
லண்டனில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஆயுதங்களை காட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
கிழக்கு லண்டனின் Hemingways Mallல் உள்ள Woolworths சூப்பர் மார்க்கெட்டில் தான் இந்த சம்பவம் கடந்த வியாழன் இரவு நடந்துள்ளது. அப்போது 8 பேர் கொண்ட கும்பல் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து பல பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் மஜோஜா நிகோலி கூறுகையில், இரவு 8 மணிக்குப் பிறகு கொள்ளையர்கள் உள்ளே சென்றிருக்கின்றனர். அப்போது கடை மூடப்பட்டிருந்தாலும், ஊழியர்கள் உள்ளே தான் இருந்தனர்.
AlgoaFM News
சம்பவ இடத்தில் துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தப்படவில்லை மற்றும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. திருடப்பட்ட சில பொருட்களில் வாசனை திரவியங்கள், ஆடைகளும் அடக்கம்.
புலனாய்வாளர்கள் சாத்தியமான அனைத்து தடயங்களையும் சேகரித்து வருவதாகவும், இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையில் சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு விசாரணைப் பிரிவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.