லண்டன்வாசிகளுக்கு மேயர் சாதிக்கான் கொரோனா பரவல் குறித்து முக்கிய அறிவிப்பு! எச்சரிக்கை தகவல்
லண்டனில், மற்றொரு தென்னாப்பிரிக்கா மாறுபட்ட கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா சோதனை விரிவுபடுத்தப்படுவதாக மேயர் சாதிக்கான கூறியுள்ளார்.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது ஒவ்வொரு நாடுகளிலும் உருமாறி பல்வேறு விதமாக விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் தீவிரமாக பரவி வருகிறது.
இதன் காரணமாகவே ஒருநாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு வரும் மக்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் மற்றும் சோதனை என்பது அவசியமாகிறது.
பிரித்தானியாவில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் உள்ளது.
இந்நிலையில், லண்டனில் மீண்டும் ஒருதென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அங்கு செய்யப்பட்டு வந்த கொரோனா பரிசோதனை, அதாவது சர்ஜ் சோதனை விரிவுபடுத்தப்படுவதாகவும், குறிப்பாக Southwark-ல் உள்ள SE16-ன் ஒரு இலக்கு பகுதியில் சோதனை அதிகரித்து வருவதாக லண்டன் மேயர் சாதிக் கான் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனால் அவர் லண்டன்வாசிகளை, நீங்கள் ஒரு பி.சி.ஆர் பரிசோதனையை(கொரோனா வைரஸ் சோதனை) எடுக்கும்படி கேட்டால், அதை எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இதன் மூலம் தான் கொரோனா பரவல் எண்ணிக்கை கூடுகிறதா? குறைகிறதா என்பதை அறியமுடியும்.
இதனால் Deal Porter சதுக்கத்தில் ஒரு மொபைல் கொரோனா சோதனை தளம் அமைக்கப்பட்டுள்ளது.
லண்டன்வாசிகள் அங்கு சென்று சோதனை மேற்கொள்ளலாம். இன்று முதல் இந்த சோதனை நடவடிக்கை அதிகரிப்பதாகவும், இந்த வார துவக்கத்தின் தெற்கு லண்டன் பகுதிகளான Wandsworth மற்றும் Lambeth-ல் உருமாறிய கொரோனா வைரஸ் வழக்குகள் 44 உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், 30 வழக்குகள் சந்தேகத்திர்குரியதாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியவை.
இதன் காரணமாக குறித்த வைரஸ் பரவியுள்ள வரையறுக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதன் மூலம் மட்டுமே அதன் மாறுபாடு எந்தளவிற்கு உள்ளது என்பதை அறிய முடியும், இதனால் மக்களே உங்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சொன்னால், செய்து கொள்ளுங்கள் என்று, Southwark கவுன்சிலின் பொது சுகாதார இயக்குனர் சங்கீதா லீஹி கூறியுள்ளார்.