லண்டனை சேர்ந்த டீன் ஏஜ் பெண் ஒருவர் குறித்து பொலிசார் புகைப்படத்துடன் வெளியிட்ட முக்கிய தகவல்!
லண்டனில் காணாமல் போன 15 வயதான டீன் ஏஜ் பெண் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
தெற்கு லண்டனை சேர்ந்தவர் ஹோலி கவுகன் (15). கடந்த 7ஆம் திகதியில் இருந்து இவர் காணாமல் போயுள்ளார்.
ஹோலி தனது வீட்டிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் நிலையில் அவரை பொலிசார் அவசரமாக தேடி வருகின்றனர்.
இது தொடர்பில் பொலிசார் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், 2006ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் ஹோலி. காணாமல் போன அன்று நீல நிற ஜீன்ஸ் பெண்ட், கருப்பு நிற மேல் சட்டை அணிந்திருந்தார்.
பார்க்க ஸ்லிம்மான தோற்றம் கொண்ட ஹோலியின் உயரம் 5 அடி 3 அங்குலம் ஆகும். அவரின் புகைப்படத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம், ஏனெனில் பொதுமக்களுக்கு அவரை அடையாளம் காண அது உதவும்.
இந்த டீன் ஏஜ் பெண் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் உடனே கூறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.