லண்டனில் நால்வர் குழுவால் இளைஞருக்கு ஏற்பட்ட துயரம்: வாய்விட்டு அலறிய ரயில் பயணிகள்
லண்டனில் விக்டோரியா பாதை சுரங்க ரயில் நிலையத்தில் 16 வயது சிறுவனை, வேட்டை கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞர் தொடர்பில் முக்கிய பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.
6 ஆண்டுகளுக்கு சிறை
லண்டனில் க்ராஷே சாலை பகுதியை சேர்ந்த 19 வயது அமர்ஜய் என்கேமயாங் என்ற இளைஞர் இந்த விவகாரம் தொடர்பில் 6 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
@getty
சம்பவத்தன்று அமர்ஜய் என்கேமயாங் உட்பட நால்வர் குழு ஒன்று அந்த சிறுவனை கண்காணித்து, அவர் பின்னால் சென்று தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சிறுவனை அமர்ஜய் என்கேமயாங் உட்பட்ட நால்வர் குழு திட்டமிட்டே தாக்கியதாக நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது. மட்டுமின்றி, பொதுவெளியில் பயன்படுத்தக் கூடாத ஆயுதத்தால் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேரில் பார்த்த இரு பொலிசார்
சம்பவம் நடந்த போது இரு பொலிசார் நேரில் பார்த்துள்ளனர். மட்டுமின்றி, அப்போது அந்த ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளும் தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்து வாய்விட்டு அலறியுள்ளனர்.
@getty
இதனிடையே, தாக்குதலை அடுத்து அந்த நால்வரும் சம்பவயிடத்தில் இருந்து தப்பியுள்ளனர். ஆனால் கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, 6 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |