லண்டன் இரயிலில் நள்ளிரவில் தனியாக இருந்த பயணியை கட்டி போட்டு இரண்டு பேர் செய்த செயல்! சிசிடிவி புகைப்படங்கள் வெளியீடு... முக்கிய தகவல்
லண்டன் இரயிலில் நள்ளிரவில் பயணியை ஜன்னலில் கட்டிபோட்டு கத்தி முனையில் அவரிடம் இருந்து பர்ஸை திருடி சென்ற நபர்கள் தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
St Pancras மற்றும் Blackfriars இடையிலான இரயிலில் தான் இச்சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி இரவு 11 மணிக்கு நடந்துள்ளது. அப்போது இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பயணி ஒருவர் அருகில் இரண்டு பேர் வந்தனர்.
பின்னர் அவரை இரயில் பெட்டியில் இருந்த ஜன்னலில் கட்டி போட்டனர், இதை தொடர்ந்து இரண்டு பேரில் ஒருவன் திடீரென கத்தியை காட்டி பயணியை பயமுறுத்தினான். இதன் பிறகு அவரிடம் இருந்து பர்ஸை கொள்ளையடித்த இருவரும் இரயிலில் இருந்து இறங்கி சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பில் இருவரின் சிசிடிவி புகைப்படங்களை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அவர்களிடம் சம்பவம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என பொலிசார் கூறியுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், நாங்கள் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ள நபர்களை அடையாளம் தெரிகிறதா? கத்திமுனையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கபட்டுள்ளது.