லண்டன் இரயில் நிலையத்தில் இளம்பெண்ணிடம் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொண்ட ஆண்! புகைப்படங்களுடன் முக்கிய தகவல்
லண்டன் சுரங்க இரயில் நிலையத்தில் பெண் எதிரில் உடைகளை களைந்து அநாகரீகமாக நடந்து கொண்ட நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு லண்டனில் தான் இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி நடந்துள்ளது.
இரயில் நிலையத்தில் வந்து நின்ற இரயிலில் இருந்து கீழே இறங்கிய ஆண் அங்குள்ள படிக்கட்டு அருகில் போய் நின்றார்.
அப்போது அந்த வழியாக ஒரு பெண் வந்த நிலையில் அவர் கண் முன்னால் உடைகளை களைந்து தனது உடலை காட்டி அநாகரீகமாகவும், அருவருப்பாகவும் நடந்து கொண்டார்,
பின்னர் இரயில் நிலையத்தில் இருந்து அவர் சென்று விட்டார். இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பிலான சிசிடிவி புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அதில் இருக்கும் நபரிடம் சம்பவம் தொடர்பாக பேசி விசாரிக்க வேண்டும் என பொலிசார் விரும்புகின்றனர்.
அவர் தொடர்பில் யாருக்காவது தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.