லண்டன் இரயிலில் தொடர்ச்சியாக அநாகரீகமான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட நபர்! சிசிடிவி புகைப்படங்களுடன் முக்கிய தகவல்
லண்டன் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக அநாகரீகமாக நடந்து கொண்ட நபர் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
British Transport Police இந்த சம்பவங்களில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி Orpingtonல் இருந்து Brixton வரை செல்லும் ரயிலில் கடந்த மாதம் 23ஆம் திகதி ஒரு சம்பவம் நடந்தது. அப்போது பயணிகள் முன்னர் தனது உடையை கழட்டி அநாகரீகமான செயலில் ஒரு நபர் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் அதே நபர் அடுத்தநாள் (24 ஆகஸ்ட்) Sydenham Hill ரயில் நிலையத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த நிலையில் இந்த சம்பவங்களில் தொடர்புடைய நபரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. யாருக்காவது இது தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் உடனடியாக தங்களிடம் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recognise him?
— BTP London (@BTPLondon) September 24, 2021
Officers investigating a string sexual offences in South London last month are today releasing CCTV images in connection.
👉 https://t.co/emll2YoWo2 pic.twitter.com/sNZIhrBTij