இங்கிலாந்தில் விதிகளை மீறி சுற்றி திரிந்த 3 இலங்கை வீரர்களுக்கு நீண்ட காலத் தடை விதிக்க பரிந்துரை! வெளியான முக்கிய தகவல்
இங்கிலாந்தில் கொரோனா விதிகளை மீறி வெளியில் சுற்றி திரிந்த இலங்கை வீரர்காள மெண்டிஸ், திக்வெல்ல மற்றும குணதிலக்க ஆகியோருக்கு நீண்ட காலத் தடை விதிக்க 5 பேர் கொண்ட குழு பரிந்துரைள்ளது.
மெண்டிஸ், திக்வெல்ல மற்றும் குணதிலக்க ஆகியோர் பயோ பபுள் விதிமுறைகளை மீறியதற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நிமல் திசாநாயக்க தலைமையிலான 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
3 வீரர்களுக்கு சம்மன் அனுப்பிய 5 பேர் கொண்ட குழு, நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டது.
விசாரணை மேற்கொண்ட 5 பேர் கொண்ட குழு, குணதிலக்க மற்றும் மெண்டிஸ்-க்கு 2 ஆண்டுகளும், திக்வெல்லவுக்கு 18 மாதங்களும் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை விதிக்க பரிந்துரைத்துள்ளதாம்.
மேலும், 3 வீரர்களுக்கு 25,000 டொலர் அபராதம் விதிக்கவும் இலங்கை கிரிக்கெட்டிற்கு பரிந்துரைத்துள்ளதாம்.
3 வீரர்களுக்கு தண்டனை விதிப்பது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் முடிவெடுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.