ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டபின் பேசும் திறனை இழந்துள்ள பிரித்தானிய பெண்: அதிர்ச்சியடையவைத்துள்ள ஒரு செய்தி
பிரித்தானியாவில் ஆறு பிள்ளைகளுக்குத் தாயாகிய ஒரு பெண், இரண்டாவது டோஸ் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து பேசும் திறனை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேம்ப்ரிட்ஜ்ஷையரைச் சேர்ந்த Sofia Gomes (43), மே மாதம் 19ஆம் திகதி தனது ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொண்டார். அடுத்த சில நாட்களில் அவரால் பேச முடியாமல் போயிருக்கிறது.
திடீரென்று கணவன் மற்றும் பிள்ளைகளுடன் பேச முடியாமல் போனதால் அதிர்ச்சியடைந்த Sofia, Norfolkஇல் உள்ள King's Lynn மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
ஆனால், மருத்துவர்கள் Sofiaவுக்கு ஸ்கேன் செய்து பார்த்தபின்னரும், அவருக்கு என்ன பிரச்சினை என அவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லையாம். ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த Sofiaவை பல்வேறு சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் சோதித்திருக்கிறார்கள்.
அவர்களாலும் Sofiaவுக்கு என்ன பிரச்சினை என கண்டுபிடிக்கமுடியவில்லையாம். ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிதான் இந்த பிரச்சினைக்கு காரணம் என Sofia உறுதியாக நம்ப, எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரோ, Sofiaவால் பேச முடியாமல் போனது தற்செயலாக நிகழ்ந்த ஒரு விடயமாக இருக்கத்தான் வாய்ப்புள்ளது என்கிறார்.
அத்துடன், பிரித்தானிய மருந்துகள் ஒழுங்கமைப்பும், Sofia பேசும் திறன் இழந்ததற்கும் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. தற்போது பேச்சுப் பயிற்சி சிகிச்சைக்காக காத்திருக்கும் Sofiaவோ, கணவனுடனும் பிள்ளைகளுடனும் பேச முடியாமல் போனதால், தான் மிகவும் வருத்தத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.