2 வருடங்களுக்கு முன் வாங்கிய லொட்டரிக்கு அதிர்ஷ்டம்., வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்ததால் இன்ப அதிர்ச்சி
பெண் ஒருவர் 2 வருடங்களுக்கு முன் வாங்கிய லொட்டரி டிக்கெட்டுக்கு ரூ.91 லட்சம் பரிசு தொகை கிடைத்ததால் இன்ப அதிர்ச்சியில் உள்ளார்.
வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த லொட்டரி
ஜேர்மனியில் வசிக்கும் பெண் ஒருவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு லொட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால், அவர் அப்போது அந்த லொட்டரி டிக்கெட்டுக்கான முடிவை பார்க்கவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அவர் வீட்டம் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, 2 வருடங்களுக்கு முன்பு வாங்கிய லொட்டரி கிடைத்தது.
ரூ.91 லட்சம் பரிசு
பின்னர் அந்த பெண், தான் வாங்கிய லொட்டரிக்கு பரிசு விழுந்துள்ளதா, இல்லையா என்று சோதனை செய்துள்ளார். அப்போது, அவரது லொட்டரி டிக்கெட்டுக்கு ரூ.91 லட்சம் பரிசு தொகை விழுந்திருப்பதை அறிந்து இன்ப அதிர்ச்சியடைந்தார்.
Representative image
மெக்டெர்பர்க் நகரத்தில் 2024 -ம் ஆண்டு டிசம்பர் 31 வரை லொட்டரி பரிசு தொகையை பெறுவதற்கான கால அவகாசம் உள்ளது. இதனையடுத்து, அந்த பெண் பரிசுத்தொகையை வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |