காதலியின் சடலம் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் குதித்த காதலன்
காதலியின் சடலம் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் குதித்த காதலன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.
காதலன் கவலைக்கிடம்
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, நாக்பூரில் உள்ள கமலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக காதலி தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதனால், காதலன் மது அருந்திவிட்டு காதலியின் இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு, அவரது உடல் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் திடீரென குதித்துள்ளார். இதனை கண்ட பெண் வீட்டார் அவரை மீட்டுள்ளனர். மேலும், அவரை தாக்கியுள்ளனர்.
பின்னர், படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |