காதலியை கத்தியால் குத்திவிட்டு காதலன் செய்த விபரீத செயல்! இரத்த வெள்ளத்தில் போராடிய துயரம்: அதிர்ச்சியில் உறைந்து போன மக்கள்
இந்தியா காதலை கைவிட்ட காதலியை, காதலன் கத்தியால் குத்தி துடி துடிக்க கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குலால். மருந்துக் கடையில் வேலை பார்த்து வரும் இவரும், உடுப்பியில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த 25 வயதான சவுமியா என்பவரும் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சவுமியா வீட்டில் திடீரென்று வேறொரு இளைஞருடன் நிச்சயதார்த்தம் செய்துவிட்டனர். இதற்கு சவுமியாவும் சம்மதித்துள்ளார். இதனால் இதை அறிந்து அதிர்ச்சியடைந்த சந்தோஷ் குலால், இது குறித்து காதலியிடம் கேட்ட போது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சவுமியா அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதாக கோபமடைந்த சந்தோஷ் குலால், கடந்த திங்கட் கிழமை சவுமியா வங்கியில் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிய போது, அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற சந்தோஷ், சந்தேகட்டே பகுதியில் வைத்து மறித்து பேசியுள்ளார்.
அப்போது தன்னை காதலித்து விட்டு வேறொருவரை திருமணம் செய்ய சம்மதித்தது ஏன் ?என்று கேட்ட போது, மீண்டும் அந்த இடத்தில் இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில், கோபத்தின் உச்சிக்கு சென்ற சந்தோஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், சவுமியாவை சரமாரியாக குத்திவிட்டு, அவரும் தன்னை கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இப்படி இருவரும் இரத்த வெள்ளத்தில் சவுமியாக உயிருக்கு போராடுவதைக் கண்டு, அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விரைந்த வந்த பொலிசார், அவர்கள் வைத்திருந்த பைகளில் அடையாளம் கண்டு, இருவரையும் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பலத்த கத்திக்குத்து காயமடைந்த சவுமியா, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
பின்னர் சந்தோசும், தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்த போதும், இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.