மலைப்பகுதியில் சடலமாக தொங்கிய காதல் ஜோடி
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காதல் ஜோடி தற்கொலை
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள தலசாரி பகுதியைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதலுக்கு எதிர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறொரு ஆணுடன் நிச்சயதார்த்தம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மலைப்பகுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். காதலனுக்கு 19 வயது, காதலியான பெண்ணுக்கு 20 வயது என்பதும் தெரிய வந்தது.
Representative image
பொலிஸார் விசாரணை
இளம் ஜோடி தூக்கில் தொங்கியது குறித்து தகவல் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காதல் ஜோடியின் பெற்றோரது வாக்குமூலங்களை பதிவு செய்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
iStock