வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் தகவல்
வடக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
வடக்கு வங்கக்கடலில் நேற்று நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது மெதுவாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கம் மற்றும் வங்காளதேசப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
இது மோங்லா (வங்காளதேசம்) க்கு தெற்கே சுமார் 130 கி.மீ சாகர் தீவு (மேற்கு வங்கம்) க்கு கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 150 கி.மீ கொல்கத்தா (மேற்கு வங்கம்) க்கு தென்கிழக்கே சுமார் 170 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது இன்று மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் அதை ஒட்டிய வங்காளதேசக் கடற்கரைகளைக் கடக்க வாய்ப்புள்ளது.
அதன் பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் கங்கை நதி மேற்கு வங்கம் மற்றும் அதை ஒட்டிய வடக்கு ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் நிலப்பரப்பு வழியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நகர்வினால் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |