வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்தம்.., 4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலெர்ட்
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதால், தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும்.
இது அடுத்த 2 நாட்களில் மேற்கு- வடமேற்கு திசையில், தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
நாளை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோல், நாளை மறுநாள், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிக கனமழை பெய்யக்கூடும்.
மேலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |