வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகிய புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும்.
தற்போது உருகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறாது என கூறியுள்ளது.
இந்நிலையில், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
அதேபோல, காரைக்காலில் மிக கனமழைக்கும், புதுச்சேரியில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |