புதிய ஐபிஎல் அணிகள் தேர்வு செய்த வீரர்களின் விவரம் வெளியானது!
புதிய இரண்டு ஐபிஎல் அணிகள் பிப்ரவரியில் நடக்கவிருக்கும் ஏலத்திற்கு முன்னதாக தேர்வு செய்ய வேண்டிய 3 வீரர்களின் பெயர்களை அறிவித்துள்ளன.
லக்னோ அணி, இந்திய வீரர் கே.எல்.ராகுல், அவுஸ்திரேலிய ஆல்-ரவுண்டனர் ஸ்டோனிஸ் மற்றும் இளம் இந்திய வீரர் ரவி பிஷ்னாய் ஆகியோரை தேர்வு செய்தள்ளது.
ராகுலுக்கு 15 கோடி, ஸ்டோனிஸிக்கு 11 கோடி மற்றும் பிஷ்னோயிக்கு 4 கோடியை லக்னோ அணி ஒதுக்கியுள்ளதாகம்.
அதேசமயம், அகமதாபாத் அணி தேர்வு செய்த 3 வீர்ரகளின் பெயர்கள் நேற்று வெளியிடப்பட்டது.
இந்திய அதிரடி மன்னன் ஹர்திக் பாண்டியா, ஆப்கானிஸ்தான் சுழல் நட்சத்திரம் ரஷித் கான் மற்றும் இளம் இந்திய நட்சத்திரம் சுப்மான் கில் ஆகியோரை அகமதாபாத் அணி தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 திகதிகளில் பெங்களூரில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.