பஞ்சாப் பயிற்சியாளரை தட்டி தூக்கும் புதிய ஐபிஎல் அணி லக்னோ! கசிந்த முக்கிய தகவல்
ஐபிஎல் அடுத்தாண்டு புதிய அணியாக வரளவுள்ள இரண்டு அணிகளில் ஒரு அணியான லக்னோ, தலைமை பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி அல்லது ஆண்டி பிளவரை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில், அகமதாபாத் மற்றும் லக்னோ என இரண்டு புதிய அணிகள் களமிறங்குகின்றன. இதில் லக்னோ அணி, பஞ்சாப் அணியின் துவக்க வீரரான கே.எல்.ராகுலை 20 கோடிக்கும், ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத்கானை 16 கோடிக்கும் வாங்க திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியானது.
இந்நிலையில், தற்போது லக்னோ, தலைமை பயிற்சியாளராக பெங்களூரு அணியின் பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி மற்றும் பஞ்சாப் அணியின் துணை பயிற்சியாளராக இருந்த ஆண்டி பிளவர் ஆகியோரில் ஒருவரை பயிற்சியாளராக நியமிக்க முடிவு செய்துள்ளதாம்.
இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம், குறிப்பாக பஞ்சாப் அணி வீரர் கே.எல்.ராகுல் இந்தணிக்கு வரவுள்ளதால், அந்தணியில் பயிற்சியாளராக இருந்த ஆண்டி பிளவர் தான் லக்னோவின் முதல் விருப்பமாக உள்ளதாம்.
இதனால் இதைப் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஐபிஎல் விதிமுறைகளை மீறி நடந்து வருவதாக லக்னோ அணி மீது பஞ்சாப் போன்ற அணிகள் குற்றம் சாட்டி வருகிறது.
ஏனெனில், வீரர்கள் தக்க வைக்கும் விஷயத்தில், அதற்கு முன்பே கே.எல்.ராகுலை அந்தணி நாடி, 20 கோடி ரூபாய் தருவதாக பேசி முடித்துவிட்டதாகவும், இதன் காரணமாகவே ராகுலை பஞ்சாப் அணியால் தக்க வைக்க முடியவில்லை என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.