ஏற்கனவே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜேர்மன் பயணிகளுக்கு மேலும் ஒரு பிரச்சினை
ஜேர்மனியில் கடந்த சில வாரங்களாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் பிரச்சினைகளை சந்தித்துவரும் நிலையில், விமான நிறுவனம் ஒன்றின் ஊழியர்களும் வேலைநிறுத்தம் துவக்கியுள்ளதால் பொதுமக்கள் மேலும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளார்கள்.
லுஃப்தான்சா நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம்
ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சா நிறுவனத்தின் Ground staff என அழைக்கப்படும், விமான நிலையத்தில் பணி செய்யும் ஊழியர்கள் இன்று, அதாவது, புதன்கிழமை அதிகாலை 4.00 மணி முதல், நாளை வியாழக்கிழமை காலை 7.10 மணி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
இதனால், சுமார் 100,000 பயணிகள் பாதிப்புக்குள்ளாக இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்துத்துத் தொழிலாளர் யூனியனான Verdi, பிராங்பர்ட் மற்றும் சூரிச் விமான நிலையங்களை இலக்கு வைத்துள்ள நிலையில், அவை மட்டுமின்றி, பெர்லின், ஹாம்பர்க் மற்றும் Duesseldorf விமான நிலையங்களிலும் 10 முதல் 20 சதவிகித விமானங்கள் மட்டுமே இயங்கும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |