புதிய சாதனை படைத்த வீரர்! கோல் மழையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பெல்ஜியம்
பெல்ஜியம் அணி வீரர் ரோமெலு லுகாகு உலகக்கிண்ணத்தில் புதிய சாதனை படைத்தார்.
டிரோசார்ட் இரட்டை கோல்கள்
பெல்ஜியம் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண கால்பந்து போட்டி BC Place Vancouver மைதானத்தில் நடந்தது.
ஆட்டத்தின் 28 மற்றும் 50வது நிமிடங்களில் பெல்ஜியத்தின் லியாண்ட்ரா டிரோசார்ட் (Leandro Trossard) கோல்கள் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து கெவின் டி ப்ரூய்னே 66வது நிமிடத்திலும், ரோமெலு லுகாகு 86வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
லுகாகு சாதனை
90+4வது நிமிடத்தில் பெல்ஜிய வீரர் அலெக்சிஸ் சேலேமேக்கர்ஸ் கோல் அடித்தார்.

நியூஸிலாந்து தரப்பில் எலிஜா ஜுட் (84வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் பெல்ஜியம் அணி 5-1 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தியது.
இப்போட்டியில் பெல்ஜிய அணி வீரர் ரோமெலு லுகாகு (Romelu Lukaku) கோல் அடித்ததன் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் தனது நாட்டின் சார்பில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |