மெட்ராஸ் ஐ! இந்த அறிகுறிகள் இருந்தால் ரொம்ப கவனமாக இருங்க! எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்..
சென்னையில் கடந்த சில நாட்களாக மெட்ராஸ் ஐ என்னும் தோற்று அதிகரித்து வருகின்றது.
கண்ணையும் இமையையும் இணைக்கும் பகுதியில் ஏற்படும் ஒரு வகையான வைரஸ் தொற்று, மெட்ராஸ் ஐ எனப்படுகிறது.
காற்றின் வாயிலாகவும், மாசுக்களின் வாயிலாகவும் பரவும் இந்த நோய், ஒரு கண்ணை பாதித்தால், மற்ற கண்ணையும் பாதிக்கும் அபாயம் கொண்டது.
எனவே இவற்றின் அறிகுறிகள் என்ன? இவற்றை தடுக்க என்ன செய்யலாம் என்பதை நாம் தெரிந்து வைத்து கொள்வது அவசியமானதாகும். தற்போது அவற்றை பார்ப்போம்.
பொதுவான அறிகுறிகள் என்ன?
- கண் சிவப்பாதல்
- கண் உறுத்தல் , எரிச்சல்
- கண் பூழை கட்டுதல்
- கண்ணில் தண்ணீர் வடிதல்
- வெளிச்சத்தை பார்க்க சிரமம்
எப்படி பரவுகின்றது?
இந்த நோய் காற்று மூலம் பரவும் என்றும், மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் உபயோகப்படுத்தினாலும் இந்த நோய் பரவும்.
கண்பார்வை பறிபோகும் அபாயம் உண்டா?
இது மற்றவர்களுக்கு எளிதில் பரவும் தன்மை உடையது. மெட்ராஸ் ஐ 5 நாட்களில் குணமடைய கூடியதுதான். அதேநேரத்தில் அலட்சியமாக இருந்தால் கண் பார்வை இழக்க நேரிடும் என்று கூறப்படுகின்றது.
மருத்துவர் அறிவுறுத்தல் என்ன?
-
கண் நோய் ஒரு தொற்று வியாதி என்பதால் அவர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- அவர் பயன்படுத்திய பொருட்களை யாரும் பயன்படுத்தக் கூடாது. அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவ வேண்டும்.
-
வெறுங்கண்களால் யாரையும் பார்க்கக் கூடாது.
கருப்பு கண்ணாடி அணிந்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்
பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?
- மெட்ராஸ் ஐ தொற்றால், பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய டிஷ்யூ பேப்பர் மற்றும் கைக்குட்டையை உடனடியாக அகற்ற வேண்டும்.
- தொற்றாளர் பயன்படுத்திய கான்டாக்ட் லென்ஸ்களை மறுபடியும் பயன்படுத்த கூடாது.
- பாதிக்கப்பட்டவர் கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்யவேண்டும்.
-
கண்களில் திரவு சுரப்பு முற்றிலும் நிற்கும்வரை, வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
- தொற்றாளரின் தலையணை உறை, ஒப்பனை பொருட்கள், துண்டு போன்ற பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
- வீட்டிலேயே சுயமருத்துவம் செய்துக்கொள்ளக் கூடாது.
- மருந்தகங்களில் சுயமாக கண் மருந்துகளை வாங்கி பயன்படுத்தக்கூடாது.