தேங்காய் இல்லாமல் அதே சுவையில் மதுரை தண்ணி சட்னி.., எப்படி செய்வது?
இந்த சுவையான மதுரை தண்ணி சட்னி இட்லி, தோசை என அனைத்திற்கு அருமையாக இருக்கும்.
அந்தவகையில், சுவையான மதுரை தண்ணி சட்னியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெங்காயம்- 2
- பச்சைமிளகாய்- 4
- பூண்டு- 3 பல்
- உப்பு- தேவையான அளவு
- பொட்டுக்கடலை- 3 ஸ்பூன்
- எண்ணெய்- சிறிதளவு
- கடுகு- 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 3
- கறிவேப்பிலை- 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய கலவை, உப்பு, பொட்டுக்கடலை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதில் நன்கு தண்ணீர் சேர்த்து கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து தாளிப்பிற்காக வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொட்டினால் சுவையான மதுரை தண்ணி சட்னி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |