'மதுரை டூ மவுண்டன் வியூ' இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழனுக்கு பத்ம பூஷன் விருது!
கூகுள் நிறுவனத்தின் சிஈஓ-வாக இருக்கும் தமிழர் சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழர்
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் மற்றும் ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழரான சுந்தர் பிச்சை, வெள்ளிக்கிழமையன்று இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பதம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில், அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில், வணிகம் மற்றும் தொழில் பிரிவில் 2022-ஆம் ஆண்டிற்கான பதம பூஷன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
ANI
'மதுரை டூ மவுண்டன் வியூ'
சுந்தர் பிச்சையிடம் விருதை ஒப்படைத்த அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து, தனது ட்விட்டர் பக்கத்தில், "சான் பிரான்சிஸ்கோவில் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையிடம் பத்ம பூஷன் விருதை ஒப்படைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மதுரையிலிருந்து மவுண்டன் வியூ வரையிலான அவரது உத்வேக பயணம் இந்தியா-அமெரிக்கா இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உறவுகளை உறுதிப்படுத்துகிறது. உலகளாவிய கண்டுபிடிப்புகளுக்கு இந்திய திறமைகளின் பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது" என்ரூ பதிவிட்டுள்ளார்.
ANI
'இந்தியா எண்ணில் ஒரு பகுதி'
விருதைப் பெற்றதும், சுந்தர் பிச்சை தனது வலைப்பதிவில், "இந்தியா எண்ணில் ஒரு பகுதி, நான் எங்கு சென்றாலும் அதை என்னுடன் எடுத்துச் செல்கிறேன். கற்றலையும் அறிவையும் போற்றும் குடும்பத்தில் வளரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. எனது ஆர்வங்களை ஆராய்வதற்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கு பெற்றோர்கள் நிறைய தியாகம் செய்தனர்" என்று தெரிவித்தார்.
ANI