டி20 உலகக் கோப்பை: இலங்கை அணிக்கு திரும்பும் நட்சத்திர வீரர்.. வெளியான முக்கிய தகவல்
காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையிலிருந்து ஓய்வளிக்கப்பட்ட இலங்கை நட்சத்திர வீரரின் நிலை குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் மகீஷ் தீக்ஷனாவுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
அக்டோபர் 23ம் திகதி ஷார்ஜாவில் நடந்த சூப்பர் 12 சுற்றில் இலங்கை-வங்க தேசம் மோதிய போட்டியில் தீக்ஷனா விளையாடவில்லை.
எனினும், அப்போட்டியில் வங்க தேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை சூப்பர் 12 சுற்றில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
அக்டோபர் 28ம் திகதி துபாயில் நடக்கும் போட்டியில் இலங்கை அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியுடன் மோதவிருக்கிறது.
இந்நிலையில், தசை சுளுக்கு காரணமாக ஓய்வு அளிக்கப்பட்ட இலங்கை நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் மகீஷ் தீக்ஷன முழுமையாக காயத்திலிருந்து மீண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகேஷ் தீக்ஷனா ஆஸ்திரேலிய போட்டிக்கான இலங்கை அணி தேர்வில் இடம்பிடித்துள்ளார் என இலங்கை கிரிக்கெட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசயம், நாளைய போட்டியில் மகேஷ் தீக்ஷனா விளையாட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.