கனத்த இதயத்துடன் தனிப்பட்ட காரணத்திற்காக இலங்கை அணியை விட்டு வெளியேறி நாடு திரும்பும் மஹிலா ஜெயவர்தனே!
டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்றுக்கான இலங்கை அணி ஆலோசகராக செயல்பட்ட ஜாம்பவான் மஹிலா ஜெயவர்தனே, அணியை விட்டு வெளியேறி நாடு திரும்பவுள்ளார்.
தகுதிச்சுற்றில் ‘ஏ’ பிரிவில் முதல் இடம்பிடித்துள்ள இலங்கை அணி, டி20 உலகக் கோப்பை ‘சூப்பர் 12’ சுற்றுக்கு முன்னேறியுள்ளது ரசிகர்களிடையே ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தகுதிச்சுற்றில் இலங்கை அணி ஆலோசகராக செயல்பட்ட மஹிலா ஜெயவர்தனே, தனிப்பட்ட காரணங்களுக்காக அணியை விட்டு வெளியேறி நாடு திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜெயவர்தனே கூறியதாவது, நாடு திரும்புவதற்கு முன் அனைத்தையும் கட்டமைத்து அணிக்கு சிறந்த யோசனையை தருவேன்.
ஐபிஎல் தொடருக்காக ஷார்ஜாவில் இருந்ததின் மூலம் கிடைத்த அனுபவத்தை கொண்டு அணிக்கு உதவுதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஐபிஎல் தொடரின் போது ஆடுகளம் எப்படி இருந்தது என எனக்கு தெரியும்.
கடந்த ஜூன் மாதம் முதல் சுமார் 130 நாட்கள் தனிமைப்படுத்தல் மற்றும் பபுளில் இருந்தது மிகவும் அது கடினமாக இருந்தது.
நான் மேலும் தங்குவது கடினம். நான் நிச்சியமாக நாடு திரும்ப வேண்டும். ஜூன் மாதம் முதல் எனது மகளை நான் பார்க்கவேயில்லை.
டி20 உலகக் கோப்பையில் மீதமுள்ள போட்டிகளுக்காக தொழில்நுட்பம் வழியாக இலங்கை அணிக்கு உதவுவேன் என மஹிலா ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.