திடீரென்று துண்டிக்கப்பட்ட மின்சாரம்... வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கானோர்: பிரித்தானியாவில் சம்பவம்
பிரித்தானியாவின் எசெக்ஸ் பகுதியில் திடீரென்று ஏற்பட்ட மின் வெட்டு காரணமாக பிரபல வணிக வளாகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்படுள்ளனர்.
எசெக்ஸ், West Thurrock பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று மதியம் கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என அனைவரும் இருளில் மூழ்கியுள்ளனர்.
இதனையடுத்து பெரும் திரளான மக்கள் குறித்த வணிக வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். பலர் சமூக ஊடகங்களில் மின் வெட்டு தொடர்பில் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
வெளியேறும் பகுதியில் திரளான மக்கள் கூட்டம் காணப்பட்டதாகவும் பலர் பதிவிட்டுள்ளனர். உணவு சாப்பிட தயாரான நேரம் மின் வெட்டு ஏற்பட்டதாக சிலர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, West Thurrock பகுதிக்கு உள்ளேயும் சுற்றுவட்டாரத்திலும் தனித்தனியாக இரண்டு நேரங்களில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, புகார் தெரிவித்து 600 தொலைபேசி அழைப்புகளும் பதிவாகியுள்ளதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.