ஜேர்மனியில் காணாமல்போன குழந்தை வழக்கில் முக்கிய திருப்பம்: ஒரு துயரச் செய்தி

Germany
By Balamanuvelan Jun 26, 2024 08:52 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

ஜேர்மனியில் காணாமல்போன ஒரு ஆறுவயது சிறுவனை, பொலிசார், ராணுவத்தினர், தீயணைப்புக்குழுவினர், அவசர உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் ஆகியோர் தேடிவருவது குறித்த செய்தியைக் கேள்விப்பட்டிருக்கலாம்.

தற்போது, ஆட்டிஸக்குறைபாடு கொண்ட அந்தக் குழந்தை குறித்த துயரச் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

பிரம்மாண்ட தேடுதல்

வடக்கு ஜேர்மனியிலுள்ள Bremervörde நகரத்தில் வாழ்ந்துவந்த ஆரியன் (Arian) என்னும் ஆறு வயதுச் சிறுவனை, பொலிசார், ராணுவத்தினர், தீயணைப்புக்குழுவினர், அவசர உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் என சுமார் 1,200 பேர் தேடிவந்தார்கள்.

சிக்கல் என்னவென்றால், சாதாரணமாக சிறுவர்கள் யாராவது காணாமல் போனால், அவர்களுடைய பெற்றோரோ அல்லது பொலிசாரோ அவர்களை சத்தமாக அழைத்தால், அந்த சிறுவர்கள் பதிலுக்கு குரல் கொடுக்க வாய்ப்புள்ளது.

ஜேர்மனியில் காணாமல்போன குழந்தை வழக்கில் முக்கிய திருப்பம்: ஒரு துயரச் செய்தி | Major Twist In Missing Child Case In Germany

Image: Sina Schuldt/dpa/picture alliance 

ஆனால், ஆரியன் ஆட்டிஸக்குறைபாடு கொண்ட குழந்தை என்பதால், அவனை அழைத்தாலும் அவனுக்கு பதிலளிக்கத் தெரியாது.

ஆகவே, ட்ரோன்கள், படகுகள், மோப்ப நாய்கள் என பல உதவும் காரணிகளுடன், மீட்புக்குழுவினர் குழந்தையைத் தேடி வந்தார்கள்.

துயரச் செய்தி

ஆனால், தற்போது அந்தக் குழந்தையைக் குறித்த கவலையளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம், ஜேர்மனியின் Lower Saxony மாகாண பொலிசார் நேற்று, அதாவது, செவ்வாயன்று, பண்ணை ஒன்றில் ஒரு குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது ஆரியனுடைய உடலாக இருக்கலாம் என தாங்கள் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

ஜேர்மனியில் காணாமல்போன குழந்தை வழக்கில் முக்கிய திருப்பம்: ஒரு துயரச் செய்தி | Major Twist In Missing Child Case In Germany

Image: Daniel Bockwoldt/dpa/picture alliance 

திங்கட்கிழமை மதியம், Behrste என்னுமிடத்தில், விவசாயி ஒருவர் தன் பண்ணையில் புல் வெட்டிக்கொண்டிருக்கும்போது குழந்தையின் உடலைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.  

அந்த உடல் ஆரியனுடையதுதானா, குழந்தை கொல்லப்பட்டது எப்படி என்பது போன்ற விடயங்களைக் கண்டறியும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளார்கள். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US