பிரான்சில் இரண்டாவது மாடியிலிருந்து குழந்தையை தூக்கி வீசிய இளம்பெண் விவகாரம்: சமீபத்திய தகவல்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த இளம்பெண் ஒருவர், தான் பெற்ற பச்சிளங்குழந்தையை, ஜன்னல் வழியாக தூக்கி வீசிய விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட பச்சிளங்குழந்தை
திங்கட்கிழமை அதிகாலை 6.00 மணியளவில், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றின் இரண்டாவது மாடியிலிருந்து, யாரோ ஒரு குழந்தையை வீசி எறிய, ஹொட்டல் ஊழியர்கள் ஓடோடிச் சென்று அந்தக் குழந்தையை தூக்கி எடுத்துள்ளனர்.
உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட, தொப்புள் கொடி கூட அகற்றப்படாத அழகான அந்த ஆண் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை உயிரிழந்துவிட்டது.
யார் அந்த குழந்தையின் தாய்?
கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள, ஒரு பெண் அந்தக் குழந்தையை ஹொட்டலின் இரண்டாவது மாடியிலுள்ள ஒரு அறையின் ஜன்னல் வழியாக வீசி எறிந்தது தெரியவந்தது.
மேலும், அமெரிக்காவின் Oregon மாகாணத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணின் பெயர் மியா (Mia McQuillin, 18) என தற்போது தெரியவந்துள்ளது.
மாணவியான மியா, ஒரு குழுவுடன் ஐரோப்பா சுற்றுலா புறப்பட்டுள்ளார். அவ்வகையில் பிரான்ஸ் வந்தபோது இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
பொலிசார் மியாவைக் கைது செய்துள்ளார்கள்.
சமீபத்திய தகவல்
இந்நிலையில், மியா பொலிஸ் தலைமையகத்திலுள்ள மன நல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த மருத்துவமனை, தீவிர மன நல பிரச்சினைகள் காரணமாக பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உடைய நோயாளிகளை அனுமதிக்கும் மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |