பிரித்தானியாவில் இந்த நாட்டு வைரஸ் 2000 பேரிடம் பரவிட்டது! தயவு செய்து தயக்கம் காட்டாதீங்க... எச்சரிக்கும் சுகாதார அமைச்சர்
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் பலரிடம் பரவிவிட்டதாக சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் நாள்தோறும் மக்கள் இறந்துவருகின்றனர். இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதால், அந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது என்பது பெரும் சவாலாக இருக்கிறது.
இந்நிலையில், இந்த வைரஸ் இப்போது பிரித்தானியாவில் 2323 பேரிடம் பரவியுள்ளதை, நாட்டின் சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் உறுதிபடுத்தியுள்ளார்.
குறிப்பாக, Bolton, Blackburn மற்றும் Darwen ஆகிய பகுதிகளில் 483 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், Bolton பகுதியில் 19 பேர் மருத்துவமனையில் உள்ளனர்.
ஆனால், அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியற்றவர்கள் என்றாலும், அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது என்று கூறுகிறார்.
நாங்கள் இதை மிக மிக நெருக்கமாக கண்காணித்து வருகிறோம், மருத்துவமனையில் இருப்பவர்கள், மருத்துவமனைக்குச் சென்றவர்கள், வார இறுதியில் Bolton மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் சமீபத்திய தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறோம்.
எல்லோரையும் பாதுகாக்க இதுவே சிறந்த வழியாகும் என்பதால் மக்கள் முன்வந்து தடுப்பூசி போட வேண்டும். மக்கள் தடுப்பூசி போடுவதை ஏற்றுக்கொள்வது இந்த தொற்றுநோயிலிருந்து வெளியேற நாம் அனைவரும் உதவும்.
நாடு முழுவதும் தடுப்பூசி பெறுவதில் தயக்கும் உள்ளவர்கள் Bolton மருத்துவமனைகளில் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள். சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
தடுப்பூசிகள் மட்டுமே உயிர்களைக் காப்பாற்றுகின்றன, உங்களைப் பாதுகாக்கின்றன, அவை உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்கின்றன. இது மட்டுமே நம்மை தொற்றுநோயில் இருந்து பாதுகாக்க உதவும்.
மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வயது தொடர்ந்து குறைக்கப்படும்.
வரும் புதன் கிழமை முதல் 36 மற்றும் 37 வயது மதிக்கத்தக்கவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். அதற்கான குறுஞ்செய்திகள் விரைவில் உங்களுக்கு வரும் என்று கூறினார்.