கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு இந்த நிலையா? ஒரு ஓட்டு கூட வாங்காத சிவகங்கை வேட்பாளர்
உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி வார்டு ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஒரு வாக்கு கூட வாங்கவில்லை என தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் வெற்றி பெற்றவர்களின் விபரங்களும் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சிவகங்கை நகராட்சி 1வது வார்டில் வேட்பாளராக செங்கோல் என்பவர் போட்டியிட்டார்.
செங்கோலுக்கு தேர்தலில் ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் திருவாரூர் நகராட்சியின் 1ஆவது வார்டில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் நேரலை வீடியோ