விரைவில்... புகழ்ந்து தள்ளிய சங்கக்காராவுக்கு மலிங்கா அளித்த நெகிழ வைக்கும் பதில்
அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்காவை குமார் சங்கக்காரா புகழ்ந்துள்ளார்.
கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எதிர்வரும் காலங்களில் என்னுடைய அனுபவத்தை இளம் கிரிக்கெட்டர்களுடன் பகிர ஆவலுடன் இருக்கிறேன் என ட்விட்டரில் வீடியோவுடன் லசித் மலிங்க தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
மலிங்காவின் ஓய்வு அறிவிப்பு குறித்து ட்விட்டரில் இலங்கை ஜாம்பவான் சங்கக்காரா பதிவிட்டதாவது, அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். இலங்கை மற்றும் உலகக் கிரிக்கெட்டுக்கான உங்களின் பங்களிப்பு எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.
உங்களுடன் விளையாடியது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இப்போதிலிருந்து நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதற்கு நல்வாழ்த்துக்கள்.
பகிர்வதற்கு உங்களிடம் நிறைய அனுபவ அறிவிருக்கிறது. ஜாம்பவான்!!! என சங்கக்காரா புகழ்ந்து தள்ளியுள்ளார்.
Thank you so much Kumar ayye, I learned a lot playing cricket with you. We’ll meet again soon.
— Lasith Malinga (@ninety9sl) September 14, 2021
தன்னை புகழ்ந்த சங்கக்காராவுக்கு நன்றி தெரிவித்த மலிங்கா, உங்களுடன் (சங்கக்காரா) கிரிக்கெட் விளையாடியதன் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன். விரைவில் மீண்டும் சந்திப்போம் என கூறியுள்ளார்.