சில நிமிடங்களில் மாறிய மம்தாவின் வெற்றி! பாஜக வெற்றி பெற்றதாக அறிவிப்பு: அதிர்ச்சியில் கட்சியினர்
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் தோல்வியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல்களில் மேற்குவங்க தேர்தலும் ஒன்று, தனி ஒரு சிங்கப் பெண்ணாக மேற்குவங்கத்தில் ஆட்சி செய்து வரும் திரிணாமுல் கட்சியை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்று பாஜக-வின் பெரிய புள்ளிகள் சூறாவளி பிரச்சாரத்தில் இறங்கியது.
இது ஒரு கெளரவ போட்டியாகவும், நீயா? நானா என்பது போன்றும் இருந்தது. ஆனால், யார் என்ன செய்தாலும் சரி, மக்கள் என் பக்கம் என்பது போல், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் முன்னிலை பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.
இந்த தேர்தலில் மம்தா பேனர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் அவர் 1200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வெற்றி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலே பாஜக வேட்பாளர் சுவெந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் மம்தா பானர்ஜியோ, நந்திகிராம் தொகுதி முடிவுகளைப் பற்றி கவலை இல்லை, மக்களின் முடிவை மதிக்கிறேன் என்று கூறியுள்ளார்.