லண்டனில் ஊசி மூலம் உணவை சேதப்படுத்தியரின் புகைப்படம் வெளியானது: அவர் ஊசி மூலம் செலுத்திய அருவருப்பான பொருள்?
லண்டனில், புதன்கிழமை இரவு, பல்பொருள் அங்காடிகள் சிலவற்றில் ஊசி மூலம் உணவில் மர்மப்பொருள் ஒன்றை செலுத்திய ஒருவர் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணையில், அவர் Fulhamஐச் சேர்ந்த Leoaai Elghareeb (37) என தெரியவந்துள்ளது.
தற்போது அவரது புகைப்படம் வெளியாகியுள்ளதுடன், அவர் சட்ட ஆலோசனை வழங்கும் ஒரு சட்டத்தரணி என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், அவர் ஊசி மூலம் இறைச்சி முதலான உணவுப்பொருட்களில் செலுத்தியது இரத்தம் என்ற அதிர்ச்சியளிக்கும் விடயமும் தெரியவந்துள்ளது. அது என்ன இரத்தம், மனித இரத்தமா, அவர் ஏன் அப்படி செய்தார் என்பது போன்ற விவரங்கள் தெரியவரவில்லை.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட நாளன்று Fulham Palace Road என்ற சாலையில் அமைந்திருக்கும் Tesco Express, Little Waitrose மற்றும் Sainsbury's Local ஆகிய
பல்பொருள் அங்காடிகளில் எதையாகிலும் மக்கள் வாங்கியிருந்தால் அவற்றை தூர எறிந்துவிடுமாறு அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள். குறிப்பிட்ட பல்பொருள் அங்காடிகள் மூடப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் அவற்றில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.