விபத்தில் சிக்கிய மனைவி.. பதறியடித்து சென்ற கணவருக்கு நேர்ந்த பரிதாபம்
மனைவியை காண இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் விபத்தில் பலி
லொறி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சண்முகம்
தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மனைவியை பார்க்க சென்ற கணவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டக்கரை பொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம்(45). இவர் தனது மனைவியுடன் சென்னையில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மகளை பார்ப்பதற்காக சண்முகத்தின் மனைவி கள்ளக்குறிச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் விபத்தில் சிக்கியுள்ளார். இதனை அறிந்த சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மனைவியை காண கள்ளக்குறிச்சிக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.
அவர் உளுந்தூர்பேட்டை நகருக்குள் செல்ல முயன்றபோது, அவ்வழியாக வந்த லொறி ஒன்று சண்முகத்தின் வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சண்முகத்தின் உடலை கைப்பற்றினர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.