வளர்ப்பு மகளிடம் அத்துமீறியதாக குற்றம் சாட்டப்பட்ட நபரை விடுவித்த நீதிமன்றம்
வளர்ப்பு மகளிடம் அத்துமீறியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவரை சுவிஸ் நீதிமன்றம் ஒன்று விடுவித்துள்ளது.
வளர்ப்பு மகளிடம் அத்துமீறியதாக...
2003க்கும் 2015க்கும் இடையில் தன் வளர்ப்பு மகளிடம் அத்துமீறியதாக சுவிஸ் நாட்டவர் ஒருவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
தான் தன் மனைவியிடம் உண்மையாக இல்லை என்பதை அவரும் ஒப்புக்கொண்டிருந்தார். இந்தப் பெண்ணுக்கு, முந்தைய திருமணம் மூலம் பிறந்த மகளிடம்தான் அவர் அத்துமீறியதாக குற்றச்சாட்டு.
ஆனால், ஜெனீவா நீதிமன்றம் ஒன்று அவர் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவித்துவிட்டது.
தற்போது 25 வயதாகும் அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தை மட்டும் நம்பமுடியாது என்று கூறியுள்ள நீதிபதிகள், தனக்கு உண்மையாக இல்லாத தன் கணவனை பழிவாங்க, அவரது மனைவி தன் மகளை பயன்படுத்திக்கொண்டிருக்கலாம் என தாங்கள் நம்புவதாக தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |