எரியும் கட்டிடத்திலிருந்து குதித்த ஆணும் இளம்பெண்ணும்: பொலிசாருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்
ஜேர்மன் தலைநகர் பெர்லிலிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீப்பற்றிய நிலையில், அந்தக் கட்டிடத்திலிருந்து குதித்த இருவர் பலியாகினர்.
எரியும் கட்டிடத்திலிருந்து குதித்த இருவர்
கடந்த வெள்ளிக்கிழமையன்று, பெர்லினில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தீப்பற்றியது. அப்போது, அந்தக் கட்டிடத்திலுள்ள ஜன்னல் ஒன்றின் வழியாக இருவர் குதித்துள்ளனர்.
துரதிர்ஷ்டவசமாக, குதித்த 45 வயது ஆண் மற்றும் 22 வயது பெண் என அந்த இருவருமே உயிரிழந்துவிட்டனர்.
ABC News
கட்டிடம் தீப்பற்றிய உடனே இருவரும் மிக மிக விரைவாக குதித்ததாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
15 தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தில் 12ஆவது தளத்தில் தீப்பற்றிய நிலையில், 12ஆவது தளத்திலிருந்து குதித்து அவர்கள் உயிரிழந்துள்ளனர். அந்த பெண் முதலில் குதித்ததாகவும், பால்கனியைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த அந்த ஆண், பின்னர் பிடியை விட்டு கீழே விழுந்ததாகவும், முதல் தளத்தில் வாழும் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொலிசாருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்
இந்நிலையில், அந்த தீயைப் பற்றவைத்தவர்களே இந்த இருவர்தானோ என பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. யார் அவர்கள் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், எப்படி தீப்பற்றியது, தீவைத்தது அவர்களா, என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |