முன்பின் தெரியாத நபரை வீட்டுக்குள் அனுமதித்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி! பொலிசார் வெளியிட்ட எச்சரிக்கை சம்பவம்
அமெரிக்காவின் பெண்ணின் வீட்டுக்கு வந்த முன்பின் தெரியாத நபர் அவரை வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸ் அதிகாரி லூக் பொன்கிவிஸ் கூறுகையில், சில தினங்களுக்கு முன்னர் 21 வயதான பெண் தனது வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்.
அப்போது வீட்டு கதவை எடார்டோ ப்ளோரிஸ் என்ற நபர் தட்டிய நிலையில் அவர் திறந்தார். இதையடுத்து தனது உடையை மாற்றி கொள்ள வேண்டும், உங்கள் வீட்டுக்குள் என்னை அனுமதித்தால் நான் மாற்றிவிட்டு சென்றுவிடுவேன் என கூறினார்.
அவர் மீது இரக்கம் கொண்ட பெண் உள்ளே அனுமதித்தார். பின்னர் அநாகரீகமாக அப்பெண்ணிடம் நடந்து கொள்ள தொடங்கிய ப்ளோரிஸ் ஒருகட்டத்தில் அவரை வன்கொடுமை செய்து தப்பியோடியுள்ளார்.
இது தொடர்பான புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த ப்ளோரிஸை கைது செய்துள்ளோம் என கூறியுள்ளார்.