9 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்றதாக பிரித்தானியர் கைது
பிரான்சிலுள்ள டிஸ்னிலேண்ட் பாரீஸ் என்னும் தீம் பார்க்கில் 9 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்றதாக பிரித்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியை திருமணம் செய்ய முயன்ற பிரித்தானியர்
கைது சனிக்கிழமை அதிகாலை டிஸ்னிலேண்ட் பாரீஸுக்கு மக்கள் வரத்துவங்கும் முன், 22 வயது பிரித்தானியர் ஒருவர், மணப்பெண் போல உடையணிந்த ஒரு 9 வயதுச் சிறுமியுடன் அங்கு வந்துள்ளார்.
அவருடன், உக்ரைன் நாட்டவரான அந்தச் சிறுமியின் தாயும் இருந்துள்ளார். அந்தச் சிறுமியை உயரமாக காட்டுவதற்காக அவளுக்கு நான்கு இஞ்ச் உயர ஹைஹீல்ஸ் அணிவிக்கப்பட்டிருந்திருக்கிறது.
திருமணத்துக்காக சுமார் 100 விருந்தினர்கள் காத்திருக்க, மலர் அலங்காரங்கள் செய்யப்பட்ட ஒரு இடத்தில் இசை நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன.
இந்த விடயம் குறித்து தீம் பார்க் ஊழியர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் அந்த பிரித்தானியரைக் கைது செய்துள்ளார்கள்.
உடனடியாக திருமண நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பின்னர் அதிகாரிகள் வெளியிட்ட ஒரு அறிக்கையில், அது ஒரு திருமணம் அல்ல, நூறு துணை நடிகர்களுடன் அரங்கேற்றப்பட இருந்த போலி நிகழ்ச்சி என குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |