14 வயது சிறுமி உடலில் நகக்கீறல்கள்! மருத்துவ பரிசோதனையில் தெரிந்த உண்மை.. சிக்கிய குற்றவாளி
அமெரிக்காவில் 14 வயது சிறுமியை வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெக்ஸாஸில் உள்ள விச்சிடா பால்ஸ் நகரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கால்வின் டோட் ஜூனியர் என்ற நபர் 14 வயது சிறுமி வீட்டில் இருந்த போது சிறுமி அப்படியே தூங்கியுள்ளார்.
பின்னர் சிறுமி தூக்கத்தில் இருந்து எழுந்த போது கால்வின் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் பொலிசாரிடம் கூறியிருக்கிறார்.
முதலில் தன் மீதான குற்றத்தை மறுத்த கால்வின் பின் மாற்றி மாற்றி பேசியிருக்கிறார். அதாவது தான் மது போதையில் இருந்ததால் என்ன நடந்தது என்றே தெரியாது என முதலில் கூறினார்.
பின்பு போதையில் இருந்ததால் சிறுமியை எனது மனைவி என தவறுதலாக நினைத்துவிட்டேன் என கூறியிருக்கிறார்.
இதனிடையில் மருத்துவ பரிசோதனையின் போது சிறுமி உடலில் ஆங்காங்கே நகக்கீறல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பொலிஸார் கால்வினை நேற்று கைது செய்தனர்.
அவரின் ஜாமீன் தொகையாக $25,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.