விவாகரத்தான பெண்கள் தான் குறி! திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி வன்கொடுமை செய்து வந்த அதிகாரி
விவாகரத்தான பெண்களை குறிவைத்து ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கோவையை சேர்ந்தவர் ஆனந்த் சர்மா. இவர் தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் விவாகரத்தான பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆனந்த் சர்மா மீது புகார் எழுந்தது.
அதன்படி கணவரை பிரிந்து 3 குழந்தைகளுடன் வசித்து வந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஆனந்த் சர்மா ஏமாற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து ஆனந்த் சர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தான் இந்த வழக்குப்பதிவானது செய்யப்பட்டுள்ளது.