ஸ்பெயினில் 2 ஸ்காட்டிஷ் ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: பிரித்தானியர் ஒருவர் கைது!
ஸ்பெயினில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் பிரித்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியர் கைது
ஸ்பெயினில் இரு ஸ்காட்டிஷ் ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, மெர்சிசைடு பகுதியைச் சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிரிட்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெர்சிசைடு காவல்துறையினர் வெள்ளிக்கிழமை லிவர்பூல் பகுதியில் ஸ்பானிய அதிகாரிகளின் வேண்டுகோளின்படி இவரைக் கைது செய்தனர்.
இன்று காலை வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஸ்பெயினுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகளின் கீழ் அவர் அங்குள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஸ்பெயினில் நடந்த துப்பாக்கி சூடு
கடந்த மே 31 அன்று ஸ்பெயினின் ஃபுயென்ஜிரோலாவில் நடந்த இரட்டை துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் இந்த கைது நடவடிக்கை தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
அன்று இரவு சுமார் 11 மணியளவில், எடி லியோன்ஸ் ஜூனியர் மற்றும் ரோஸ் மோனாகன் ஆகிய இருவர், ஓர் ஐரிஷ் பப் வெளியே முகமூடி அணிந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தகவல்களின்படி, ஒரு கார் அந்த இடத்திற்கு வந்து நின்றதாகவும், முகமூடியணிந்த துப்பாக்கிதாரி வாகனத்தில் இருந்து இறங்கி, பப்பிற்குள் இருந்த இருவரையும் சுட்டுவிட்டு அதே காரில் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இரு பாதிக்கப்பட்டவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஸ்காட்லாந்து காவல்துறையினர் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், ஸ்பெயினில் நடந்த இந்த இரட்டை துப்பாக்கிச் சூட்டிற்கும், ஸ்காட்லாந்தில் சமீபத்தில் நடந்த குற்றச் சம்பவங்களுக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |