உடற்பயிற்சிகூடம் வைத்துள்ள நபரை நம்பி காதலித்த 10ஆம் வகுப்பு மாணவி! மறைமுகமாக எடுத்த வீடியோவால் நேர்ந்த விபரீதம்
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அது குறித்த அதிர்ச்சியளிக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.
திருவள்ளூரில் உடற்பயிற்சிகூடம் வைத்துள்ள அரவிந்தனும், அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்த நிலையில், இருவரும் நெருக்கமாக இருக்கும் போது அதனை தனது செல்போனில் அரவிந்தன் மறைமுகமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
மேலும் அந்த வீடியோவை காட்டி தன்னுடன் அடிக்கடி நெருக்கமாக இருக்க வரும்படி மாணவியை தொடர்ந்து மிரட்டி வன்கொடுமை செய்திருக்கிறார்.
இதனால் மனவேதனை அடைந்த மாணவி, பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனையறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிசார் அரவிந்தனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
அவரிடம் தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.