பட்டப்பகலில் குழந்தையை கடத்த முயன்ற நபர் இவர்தான்: சிக்கியது எப்படி தெரியுமா?
அமெரிக்காவில் பட்டப்பகலில் தன் தாயுடன் நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு சிறுவனை மர்ம நபர் ஒருவர் கடத்த முயலும் காட்சிகள் வெளியாகி திடுக்கிட வைத்தன.
அமெரிக்காவில் Queens என்ற இடத்திலுள்ள சாலை ஒன்றில் தன் கணவரை சந்திப்பதற்காக, தன் பிள்ளைகளுடன் நடந்து சென்றுகொண்டிருந்திருக்கிறார் Dolores Diaz Lopez (45) என்ற பெண்.
அப்போது, கார் ஒன்றில் அமர்ந்திருந்த ஒருவர், திடீரென காரை விட்டிறங்கி ஓடிவந்து, அந்த குழந்தைகளில் ஒன்றை தூக்கிக்கொண்டு சென்று தனது காரில் ஏற்றியிருக்கிறார்.
Jacob என்ற அந்த 5 வயது சிறுவனை யாரோ தூக்கிச்செல்வதைக் கண்டு பதறிய Dolores, கடவுளே ,என் பிள்ளை என கத்தியபடி அந்த நபருக்கு பின்னால் ஓடியிருக்கிறார்.
அந்த நபர் குழந்தையை காருக்குள் ஏற்றி விட்டு மறுபக்கம் சென்று காரில் ஏற, Jacobஇன் அண்ணன் Benny, தன் தம்பியை விட்டு விடுங்கள் என கதற, அதற்குள் காரிலிருந்த தன் மகனை திறந்திருந்த கார் கண்ணாடி வழியாகவே இழுத்து வெளியே எடுத்துவிட்டார் Dolores.
தன் திட்டம் தோற்றுப்போனதை அறிந்த அந்த நபர் காரில் ஏறி தப்பிவிட்டார். குழந்தையைக் கடத்த முயன்றவரும் மற்றொருவரும் நடமாடும் காட்சிகள் CCTV கமெராக்களில் தெளிவாக பதிவாகியுள்ளதையடுத்து, அதன் அடிப்படையில் பொலிசார் அவர்கள் இருவரையும் தேடி வந்தார்கள்.
இந்நிலையில், சற்று நேரத்துக்குப்பின் அதே ஆள் சும்மா நின்ற ஒருவரை முகத்தில் குத்த, அவர் இவரை திருப்பி புரட்டி எடுத்திருக்கிறார்.
அடிவாங்கி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற இடத்தில், மருத்துவமனை ஊழியர்கள் இவர்தான் அந்த குழந்தையைக் கடத்தியவர் என்பதை அறிந்துகொண்டு, உடனே பொலிசாருக்கு தகவல் கொடுக்க, பொலிசார் வந்து அவரை கைது செய்துள்ளனர்.
அந்த நபரின் பெயர் James McGonagle (24) என தெரியவந்துள்ளது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் 15 ஆண்டுகள் வரை சிறை செல்ல நேரிடும் என தெரியவந்துள்ளது.